பல்லவி
வினதா ஸுத ராரா நா வினுதி 1கை3கொனரா
அனுபல்லவி
க4ன நாக3 பாஸ1ம்பு3ல க2ண்டி3ஞ்ச ராரா (வி)
சரணம்
சரணம் 1
2அமரேஸு1னி கெ3லிசி நீவம்ரு2தமு தெச்சி
விமல கீர்தி வஹிஞ்சி வெலஸில்லின வீரா (வி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினதா/ ஸுத/ ராரா/ நா/ வினுதி/ கை3கொனரா/
வினதை/ மைந்தா/ வாராயய்யா/ எனது/ போற்றியினை/ ஏற்பாயய்யா/
அனுபல்லவி
க4ன/ நாக3/ பாஸ1ம்பு3ல/ க2ண்டி3ஞ்ச/ ராரா/ (வி)
கொடிய/ அரவு/ கட்டுகளை/ துண்டிக்க/ வாராயய்யா/
சரணம்
சரணம் 1
அமர/-ஈஸு1னி/ கெ3லிசி/ நீவு/-அம்ரு2தமு/ தெச்சி/
அமரர்/ ஈசனை/ வென்று/ நீ/ அமிழ்தினை/ கொணர்ந்து/
விமல/ கீர்தி/ வஹிஞ்சி/ வெலஸில்லின/ வீரா/ (வி)
மாசற்ற/ புகழ்/ அடைந்து/ ஒளிரும்/ வீரா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கை3கொனரா - கை3கொனுமா : அனுபல்லவி மற்றும் அனைத்து சரணங்களிலும், கடைச்சொற்களை கருத்தில் கொண்டு, 'கை3கொனரா' சரியென புலப்படுகின்றது.
2 - அமரேஸு1னி கெ3லிசி - அமரேஸு1னி கொ3லிசி : 'கெ3லிசி' என்றால் 'வென்று' என்றும், 'கொ3லிசி' என்றால் 'புகழ்ந்து' என்றும் பொருள்படும். கீழே கூறப்பட்ட மேற்கோளின்படி, கருடன், இந்திரனை வென்று, அமிழ்தினைக் கொணர்ந்தான். எனவே 'கெ3லிசி' ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
2 - அமரேஸு1னி கெ3லிசி - தன்னுடைய தாய் வினதையை சிறை மீட்கவேண்டி, இந்திரனை வென்று, கருடன் அமிழ்து கொணர்ந்த கதையினை மகாபாரதம், ஆதி பர்வம், ஆஸ்திக பர்வம், பகுதிகள் 32 - 34-ல் நோக்கவும்.
விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' எனும் நாட்டிய-நாடகத்தில், கடலரசன், பிரகலாதனுக்காக, கருடனை நோக்கிப் பாடுவதாக
வினதை - கருடனின் தாய்
அமரேசன் - இந்திரன்
உனக்கு நிகரான தொண்டன் - பிரகலாதனைக் குறிக்கும்
தியாகராசனால் போற்றப் பெற்றோன் - அரி
Top